Posts

Showing posts from April, 2019

திருடப்படும் வாய்ப்புகள்

வயதிற்கேற்ற வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். நாம் ஒவ்வொருவரும் படிப்பிற்கான வாய்ப்பு, வேலைக்கான வாய்ப்பு, சுற்றுலா செல்வத்திற்கான வாய்ப்பு, நண்பர்களுடன் விளையாடுவதிற்கான வாய்ப்பு என்று  இப்படி ஏதாவது ஒரு சில வாய்ப்புகள் உங்களுக்கு தெரிந்தே கைவிட்டு போயிருக்கும். அவையெல்லாம் நினைவில் இருக்கும். மீண்டும் அதே சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் செல்லாமல் விட்டது மனதில் இருக்கலாம். அந்த காலங்கள் திரும்ப கிடைக்காது.

அரவணைப்பு

Image
நாமெல்லாம் தொடர்ந்து அதுவும் ஒரே நாட்களில் பல முறை அரவணைப்புகளை பெற்று வளர்ந்திருக்க மாட்டோம். அதற்காக நமது பெற்றோர்களுக்கு நம் மீது அன்பு இல்லை என்று சொல்லவில்லை. அந்த அன்பு உடல் மொழிகளாக வெளிப்பட்டிருக்காது. அதனால் நமக்கும் அரவணைப்பை நமது குழந்தைகளுக்கு கொடுப்பதில் தயக்கம் இருக்கலாம்.

படமும் குழந்தைகளும்

Image
வரலாற்று கோப்புகளில் இருந்து ஒரு துளி. "மே 29, 2017 அன்று எனக்கு அதிக சந்தோசமா இருந்தது.மனம் மிகவும் தெளிவாக, பத்து குதிரை வேகமெனும் ஓட தயாராக உள்ளது. நூறு யானை பலமேனும் இழுத்து பார்த்திட வேண்டும் என்று இருக்கிறது. மனித இயந்திரமாக ஓடி கொண்டிருக்கும் நாட்களுக்கு இடையில் எது என்னை இவ்வளவு சந்தோசப் படுத்தியது. இவ்வளவு மாற்றத்தை கொடுத்த அந்த நிகழ்வு எது!!. இளையவன்(3 வயது) மூன்று வார்த்தைகளை கோர்வையாக பேச அதை நான் கேட்ட தருணமா, அல்லது பெரியவன்(வயது 5.5) கண்ணில் இருந்து சிறு உப்பு நீர் வர காரணமாக இருந்த அந்த படத்தின் காட்சிகளா!.

அன்பின் வெளிச்சம்...

Image
ஒன்றுக்கு மேல குழந்தைங்க இருக்கிற வீட்டுல காலையில எழுந்தவுடேனே நாட்டாமை சொம்பு வெச்சுக்கிட்டு உட்கார வேண்டியிருக்கலாம்.இரண்டு குழந்தை இருந்தா நல்லா இருக்குமுன்னு நெனைக்கறவங்க, இதை பார்க்கிற ஒரு சிலர்,    இல்ல இல்ல, ஒரு குழந்தைய நல்லா வளர்த்தா போதும்மென்ற மனநிலைக்கு வந்திடுறாங்க.